DFCC கருசரு தனிப்பட்ட கடன்

DFCC கருசரு தனிப்பட்ட கடன்

அரச ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான விசேட தனிப்பட்ட கடன் திட்டம்.

தகைமை

தகைமை

  • அரச ஓய்வூதியம் பெறுபவராக அல்லது ‘விதவை ஓய்வூதியம்” பிரிவின் கீழ் ஓய்வூதியம் பெறும் விதவைகளாக அல்லது இலங்கை மத்திய வங்கியின் ஓய்வூதியம் பெறுபவராக அல்லது இலங்கை மின்சார சபையின் (CEB) ஓய்வூதியம் பெறுபவராக இருக்க வேண்டும்.
  • “அனாதைகள்” பிரிவின் கீழ் சிறார்களின் சார்பாக ஓய்வூதியம் பெறும் பாதுகாவலர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது 74 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் 75 வயதை அடையும் போது அல்லது அதற்கு முன் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த வேண்டும்.
  • மாதாந்த கடன் தவணை அதிகபட்சமாக மாதாந்த நிகர ஓய்வூதியத்தின் 60% வரை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
  • குறைந்தபட்ச கடன் தொகை – ரூ. 100,000
  • அதிகபட்ச கடன் தொகை – ரூ. 5 மில்லியன்

மீள்செலுத்துகை

  • விண்ணப்பதாரர்கள் 75 வயதை அடையும் போது அல்லது அதற்கு முன் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்துவதை பொருத்து, அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை கருசரு தனிப்பட்ட கடனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் தவணை கணக்கீட்டைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் (தனிநபர் கடன் கணிப்பான்)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து DFCC வங்கி கிளைக்கு சமர்ப்பிக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வோம்.

மேலும் அருகிலுள்ள DFCC வங்கிக் கிளைக்கு விஜயம் செய்தும் விண்ணப்பிக்க முடியும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளும் நிபந்தனைகளும்
  • தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம்; அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓய்வூதியதாரரின் அடையாள அட்டை
  • கோரிக்கையை பொருத்து, முறையாக நிரப்பப்பட்ட இணைப்பு 1,2,3 மற்றும் 5

டிஜிட்டல் வங்கிச்சேவை

வட்டி வீதம்

உதவு கருவிகள் மற்றும் ஆதரவு

எங்களுடன் தொடர்பு கொள்வதற்கு

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000