பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுதல்: DFCC வங்கி ஆலோகவின் அனுசரணையில் WCIC Prathibhabhisheka மகளிர் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2022 நிகழ்வு
February 13, 2023
இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் முற்போக்கான வங்கிகளில் ஒன்றான DFCC வங்கி, DFCC ஆலோகாவின் பிளாட்டினம் அனுசரணையுடன் நடத்தப்பட்ட WCIC Prathibhabhisheka மகளிர் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2022 நிகழ்விற்கு வலுவூட்ட கிடைத்த வாய்ப்பினை கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது. பெண் தொழில்முயற்சியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் இவ்விருது வழங்கும் விழா, 2023 ஜனவரி 11 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள், 2022 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் தொழில்முயற்சியாளருக்கான இறுதி விருதையும், பட்டத்தையும் Genelabs Medical (Private) Limited இன் கலாநிதி சந்தனமாலி புஞ்சிஹேவாவிடம் வழங்கினார். அத்துடன் சமூகத்திற்கான தனது அர்ப்பணிப்பு சேவைக்காக அவர் பாரிய நிறுவன பிரிவில் தங்க விருதையும், மேல் மாகாணத்திற்கான விருதையும் வென்றார்.
WCIC Prathibhabhisheka மகளிர் தொழில்முயற்சியாளர் விருதுகள், DFCC ஆலோகவின் அனுசரணையில் நடத்தப்பட்டுள்ளது. இது மகளிர் தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் (Women’s Chamber of Industry and Commerce – WCIC) ஒரு முயற்சியாக அமைந்துள்ளதுடன், இலங்கை மற்றும் பரந்த சார்க் பிராந்தியத்தில் உள்ள சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களின் பங்களிப்புக்களை அங்கீகரித்து அவர்களை உலகுக்கு வெளிக்கொண்டு வருவதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு 175 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட அதே நேரத்தில், 47 உத்வேகம் கொண்ட பெண்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், தமது வணிக வளர்ச்சியில் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் அதிகளவில் வேலை வாய்ப்புகளை தோற்றுவிப்பதற்கும் அவர்களின் சிறப்பான பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையில் சிறப்பான கவனிப்புடன், நேருக்கு நேர் நேர்காணல்கள் உட்பட, கடுமையான நடுவப்பணி அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சுயாதீனமான, முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு விருதுகள் தீர்மானிக்கப்பட்டு, வழங்கப்பட்டன. Ernst and Young நிறுவனம் ஒரு சுதந்திரமான 3 வது தரப்பாக, பங்கேற்பாளர்களை மதிப்பீடு செய்தது.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா அவர்கள், “இலங்கையில் உள்ள பெண் தொழில்முயற்சியாளர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் இந்த நல்முயற்சியின் ஒரு அங்கமாக இருந்ததில் நாம் பெருமை கொள்கிறோம். DFCC வங்கியில், நாம் பெண்களுக்கு வலுவூட்டுவதிலும், நிதியியல் ரீதியாக அவர்களின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளோம். பெண்களை மையமாகக் கொண்ட எமது வங்கிச்சேவை முன்மொழிவான, DFCC ஆலோக, இந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். மேலும், பெண்களுக்கு அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை அடையத் தேவையான நிதியியல் கருவிகளை வழங்குகிறது. கலாநிதி சந்தனமாலி புஞ்சிஹேவா மற்றும் DFCC ஆலோக வாடிக்கையாளர்கள் உட்பட WCIC Prathibhabhisheka மகளிர் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2022 நிகழ்வின் வெற்றியாளர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகள் நம் அனைவருக்கும் உத்வேகமாக உள்ளன,” என்று குறிப்பிட்டார்.
DFCC ஆலோக என்பது வயதுவேறுபாடின்றி அனைத்து பெண்களினதும் அபிலாஷைகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நிதி மற்றும் நிதி அல்லாத தளமாகும். இது கணக்குகளைத் திறப்பதற்கான குறைந்த ஆரம்ப வைப்புத்தொகை, வைப்புத்தொகைகள், கடன்கள் மற்றும் கடன் முற்பணங்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான வட்டி வீதங்கள், கட்டணமின்றி ஏடிஎம் மையத்தில் பணம் மீளப் பெறுதல், டிஜிட்டல் வங்கிச் சேவைகள், தனிநபர் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகள், அடகு வைக்கும் வசதிகள், இலவச ஆயுள் காப்புறுதி மற்றும் டிஜிட்டல் சுகாதார தீர்வுகள், வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளில் வெகுமதிகள் அடங்கலாக பலதரப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும், இது பெண்களுக்கு சொந்தமான மற்றும் பெண்கள் வழிநடத்தும் வணிகங்களுக்கு மேலதிகப் பற்று வசதிகள், வங்கி உத்தரவாதங்கள், சுழலும் குறுகிய கால கடன்கள் மற்றும் கால அடிப்படையிலான கடன் வசதிகள் போன்ற விசேட சேவைகள் மூலம் உதவி வருகிறது, அண்மைக் காலங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் யுஎஸ்எயிட் ஸ்தாபனங்களால் முன்னுரிமை கட்டண அடிப்படையில் அவற்றை வழங்க ஆரம்பித்துள்ளது. எங்களுடைய எதிர்கால மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய விசாரணைகள் அல்லது தெளிவுபடுத்தல்கள் அனைத்தும், எங்கள் பணியாளர்களால் 24 மணி நேர ஆலோக வாடிக்கையாளர் துரித சேவை அழைப்பு இலக்கத்தின் மூலம் மும்மொழிகளிலும் அவர்களின் வசதிக்காகவும், சிறந்த புரிதலுக்காகவும் விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கான தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் தொழில் முயற்சி ஆதரவு ஆகியவற்றை வழங்க DFCC நிபுணத்துவ அணி எப்போதும் தயாராக உள்ளது. பெண்களை மையமாகக் கொண்ட விசேட இலச்சினை கொண்ட கடனட்டை, பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் குடும்பத் தேவைகளுக்கு ஏற்றவாறு சலுகைகளை வழங்குகிறது.
WCIC Prathibhabhisheka மகளிர் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2022, இலங்கை மற்றும் பரந்த சார்க் பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கான அவர்களின் தலைசிறந்த பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பல்வேறுபட்ட பெண் தொழில்முயற்சியாளர்களைக் கண்டது. இதில் Herveda Botanicals Pvt Ltd நிறுவனத்தின் பிரதிவா பாண்டே (சார்க் பிராந்தியம் மற்றும் சார்க் பிரிவில் தங்கம்), Brilliant Cuts Pvt Ltd நிறுவனத்தின் விந்தியா பெரேரா (இளம் பெண் தொழில்முயற்சியாளர்), Eco Serene Biotech Pvt Ltd நிறுவனத்தின் இஷா விஜயரத்னம் (சிறந்த தொடக்க வணிக முயற்சி மற்றும் சிறுதொழில் பிரிவில் வெள்ளி விருது மற்றும் வடமேல் மாகாணத்திற்கான விருது), Ruwini Jayarathne Jewellery இன் ருவினி ஜெயரத்ன (துணிச்சலான பெண் தொடக்க வணிக முயற்சியில் தங்கம் வென்றவர்), Manisha Exports Pvt Ltd இன் நிஷானி பெர்னாண்டோ (மிகச் சிறந்த ஏற்றுமதி சார்ந்த பெண் தொழில்முயற்சியாளர்/தயாரிப்பு), மற்றும் தானியா பொலன்னோவிட்ட வெத்திமுனி (மிகச் சிறந்த ஏற்றுமதி சார்ந்த பெண் முயற்சியாளர்/சேவை மற்றும் பாரிய நிறுவன பிரிவில் இணை வெள்ளி விருது) அடங்கலாக பல்வேறு வெற்றியாளர்கள் அடங்கியிருந்தனர்.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த WCIC இன் தலைவர் அனோஜி டி சில்வா அவர்கள், “எமது பிளாட்டினம் அனுசரணையாளராக DFCC வங்கி ஆலோகாவை பெற்றுள்ளமை ஒரு பெரிய கௌரவம்,” என்று கூறினார். மேலும், “ஆலோக போன்ற முன்மொழிவுகள் பெண்களுக்கு தொடர்புடைய நிதி சார்ந்த மற்றும் நிதி அல்லாத சேவைகள் மூலமாக, தொழில் தகைமை கொண்ட பெண்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவிக்க உதவுகிறது. WCIC Prathibabisheka விருதுகள் அத்தகைய பெண்களின் மகத்தான பங்களிப்புகளை அங்கீகரிக்க முயல்கின்றன. எனவே இது இரண்டுமே இயற்கையாகவே பொருத்தம் கொண்டவை. இச்சந்தர்ப்பத்தில் DFCC வங்கிக்கு நன்றி தெரிவிப்பதோடு, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் – துசிதா குமாரகுலசிங்கம் – இணைத் தலைவர் WCIC PRATHIBHABHISHEKA / WCIC சபை உறுப்பினர், ரமணி பொன்னம்பலம்- இணைத் தலைவர் WCIC PRATHIBHABHISHEKA, திமால் பெரேரா – DFCC வங்கி பிஎல்சி இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, கௌரவ. ரணில் விக்கிரமசிங்க – இலங்கை ஜனாதிபதி, கலாநிதி சந்தனமாலி புஞ்சிஹேவா – GeneLabs Pvt Ltd மற்றும் அனோஜி டி சில்வா- தலைவர் WCIC.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலை பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும். “அனைவருக்கும் ஏற்ற வங்கி” என்ற கருப்பொருளின் கீழ் பராயமடையாதவர் முதல் சிரேஷ்ட பிரஜைகள் வரை, மற்றும் நுண் தொழில்முயற்சியாளர் முதல் பாரிய அளவிலான தொழில் முயற்சியாளர் வரை, மற்றும் சில்லறை வணிகம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை வெவ்வேறுபட்ட தீர்வுகள் மூலமாக அனைத்து அளவிலான வருமானத்திற்கும், DFCC வங்கி அவற்றை வெவ்வேறாக இனங்கண்டு, உதவி வருகிறது.
WCIC பற்றிய விபரங்கள்
மகளிர் தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம் (Women’s Chamber of Industry and Commerce – WCIC) இலங்கையில் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில்சார் வணிகப் பெண்களுக்கு ஆதரவளிக்கும் முதன்மையான அமைப்பாகும். சமூகத்திற்கு தம்மால் பங்களிக்க முடியும் மற்றும் இச்சம்மேளனம் வழங்கும் பல வசதிகளிலிருந்து பயனடைய முடியும் என்று நம்பும் பெண்கள் இதில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும். WCIC Prathibhabisheka இந்த ஆண்டு ஒரு முதன்மை நிகழ்வாக மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்திற்கு நுண் முதல் பாரிய அளவிலான வணிகம் வரை அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும்.