DFCC வங்கியானது வாடிக்கையாளர்களின் விபரங்களைச் சரிபார்க்கும் நடைமுறையை சீரமைப்பதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
April 30, 2021
இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள, மிகவும் கவனமாக திட்டமிடப்பட்ட டிஜிட்டல் எதிர்கால திட்டத்தின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேசமயம், தனது ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பு செயல்முறையை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, DFCC வங்கியானது ஆட்பதிவுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.
வங்கியின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பு செயல்முறையை சீரமைப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை விபரங்களை அங்கீகரித்தல் மற்றும் சரிபார்ப்பிற்காக ஒன்லைன் முறையைப் பயன்படுத்த இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது DFCC வங்கிக்கு இடமளிக்கின்றது. புதிய முறைமையானது வாடிக்கையாளர்கள் தமது ஒப்புதலை வழங்கும் பட்சத்தில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒன்லைன் கட்டமைப்பில் உள்ள தகவல் விபரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை நிகழ்நேர அடிப்படையில் சரிபார்ப்பை மேற்கொள்ள DFCC வங்கிக்கு இடமளிக்கும்.
இந்த செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவது குறித்த நேரகாலத்தில் வாடிக்கையாளர் அடையாள தரவை துல்லியமாகப் பெற்றுக்கொள்ள DFCC வங்கிக்கு உதவும். அடையாளத் தகவல் விபரமானது வங்கிச் செயல்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், இந்தத் தரவைத் துல்லியமாகப் பெற்றுக்கொள்வது DFCC வங்கியைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது.
வாடிக்கையாளர் ஒருவர் தனது ஒப்புதலை அளித்தவுடன், DFCC வங்கிச் சேவைகளைப் பெற விரும்பும் நபரின் தேசிய அடையாள அட்டையின் விவரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க எந்தவொரு வாடிக்கையாளரும் சமர்ப்பித்த தேசிய அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களின், தரவுகளையும், படங்களையும் சரிபார்க்க இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை DFCC வங்கிக்கு இடமளிக்கிறது.
DFCC வங்கியைப் பொறுத்தவரை, தனது வாடிக்கையாளர்கள் இனிமேலும் கணக்குகளை ஆரம்பிப்பதற்கோ அல்லது DFCC வங்கியின் ஏனைய சேவைகளைப் பெற்றுக்கொள்ளவோ வங்கி கிளைகளுக்கு வருகை தந்து, எவ்விதமான படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, வங்கியில் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக ஒட்டுமொத்த செயல்முறையையும் இப்போது டிஜிட்டல் தளத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். இது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை மேம்படுத்துவதுடன், செயல்திறன் மட்டத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் மிகவும் டிஜிட்டல்ரீதியில் இயக்கப்படும் வங்கிகளில் ஒன்றாக, உச்சத்தில் திகழும் DFCC வங்கி, இலங்கை மத்திய வங்கியின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்துறை வாரியான தீர்வை விரைவாக உள்வாங்கிக்கொள்வது இதற்கு ஒரு சிறந்த சான்றாகும். இடைவிடாத டிஜிட்டல்மயமாக்கலின் பயணத்தை வங்கி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கையில், அதன் வாடிக்கையாளர்கள் முன்பை விட எளிதாக வங்கியின் திறனை வரவேற்பார்கள் என்பது நிச்சயம்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
DFCC வங்கியின் தலைமைத் தொழிற்பாட்டு அதிகாரியான திரு. அச்சிந்த ஹேவநாயக்க (இடமிருந்து 4 ஆவது) அவர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமான திரு. பீ. வி. குணதிலக (இடமிருந்து 5 ஆவது) அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை பகிர்ந்து கொள்வதுடன், DFCC வங்கி மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் அவர்களைச் சூழ காணப்படுகின்றனர்.