தவிர்க்கவேண்டிய கடனட்டை தவறுகள் – 4 ஆலோசனைகள்!
October 22, 2019
கடனட்டை என்பது, ஒரு அதிசயமான பாதுகாப்பான பரிவர்தணையை எளிதாக்கும் ஒரு வழியாகவும் பல சலுகைகளை வழங்கும் ஒரு சிறந்த தெரிவாகும். எவ்வாறாயினும், உங்களது கடனட்டையை, நீங்கள் சிறந்த முறையில் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துகின்றீர்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
இறுதியாக, கடனட்டையைப் பயன்படுத்தும் நீங்கள், 4 முக்கிய ஆலோசனைகளை, எப்போதும் மனதில் கொண்டிருக்கவேண்டும்.
குறைந்தபட்ச கட்டணத்தை மாத்திரம் செலுத்துதல் மற்றும் தாமதக் கட்டணங்கள்
உங்களது கடனட்டை, குறைந்தபட்ச கட்டணத்தை மாத்திரம் செலுத்துவதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றது. ஆனால், அவசர காலத்தில், நீங்கள் நிதி மூலமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும்போது மாத்திரமே பயன்படுத்துவது சிறந்தது. கடனட்டை மூலமான உங்களது கொள்வனவுக்கான கட்டணத்தை நீங்கள் செலுத்துவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பதால், குறைந்தபட்சக் கட்டணத்தை மாத்திரம் செலுத்துவது நல்லதல்ல. எனவே, குறைந்தபட்ச தொகையை விட, உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவு கட்டணத்தைச் செலுத்த முயலுங்கள்.
கடனட்டையைப் பயன்படுத்தும்போது, உங்களது கட்டணத் தினத்துக்கு பின்னர் கட்டணத்தை மேற்கொள்வது, மிகப்பெரிய தவறாகும். தாமதமான கட்டணங்களை செலுத்துவதால், வங்கிக்கான தாமதக்கட்டணத்தைச் செலுத்தவேண்டிய தேவை உங்களுக்கு ஏற்படும். அத்துடன், 30 நாள்களுக்குள் கட்டணத்தைச் செலுத்தாவிடின், கடன் தகவல்கள் பணியகத்தில், உங்களது பெயர் தாமதக்கட்டணத்துக்காக குறிப்பிடப்படும். 90 நாள்களாக எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தாவிடின், CRIBக்கு தெரிவிக்க, பல வங்கிகளுக்கு சட்டப்படி தேவை உள்ளது. இதனால், உயர்ந்த வட்டிவீதங்களுடன் அபராதப்பணங்களைச் செலுத்தவேண்டிய தேவையற்ற சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படும். அதனால், எப்போதும், குறைந்தபட்ச பணத்தையாவது கட்டணத்தை மாத்திரமாவது செலுத்துவதற்கு மறந்துவிடாதீர்கள் DFCC கடனட்டை மீள்செலுத்துகை கணிப்பாணை இங்கே பார்க்கவும்.
மற்றையவர் உங்களது கடனட்டையைப் பயன்படுத்த அனுமதி வழங்குதல்
அனைத்து கடனட்டைகளிலும், மூன்றாம் நபரொருவர் உங்களது கடனட்டைகளைப் பயன்படுத்துவது, தடுக்கப்பட்டுள்ளது. தவறுதலாகக்கூட, என்னதான் நம்பிக்கையான நபராக இருந்தாலும், உங்களது கடனட்டையை மற்றொருவர் பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுமதி க்கக்கூடாது. இதனால், குறித்த நபர் மேலதிகமான கொள்வனவுகளை மேற்கொண்டால், அதற்கான கட்டணங்களையும் நீங்ககளே செலுத்தவேண்டிய தேவை ஏற்படும் என்பதால், இது குறித்து மிகவும் அவதானமாக இருப்பது சிறந்தது.
கடனட்டையை இழந்துவிட்டால் அல்லது சந்தேகத்துக்கிடமான பரிமாற்றல்கள் இடம்பெற்றால், உடனடியாக அறிவிக்கவும்
உங்களது கடனட்டை காணாமல் போய்விட்ட பின்னர், அதில் ஏதேனும் பரிமாற்றல்கள் இடம்பெற்றால், அது பாரிய பிரச்சினையாகும். எனவே, இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறும்போதோ அல்லது உங்களது கடனட்டை காணாமல் போன அடுத்த நிமிடமே, அது குறித்து வங்கிக்கு உடனடியாக அறிவிப்பது மிக முக்கியமானதாகும். இதன்மூலம், வங்கி உங்களது கடனட்டையை முடக்கிவிட்டு, விசாரணைகளின் பின்னர், புதிய கடனட்டையொன்றை உங்களுக்கு வழங்கும். கடனட்டை காணாமல்போன பின்னர், நீங்கள் எவ்வளவு நேரம் பொறுத்திருக்கின்றீர்களோ அவ்வளவு தூரம் உங்களது பிரச்சினை பெரிதாகும் என்பதே அர்த்தம். அதனால், உங்களது அட்டை தொலைந்துவிட்டால், 7 நாள்களுக்கு 24 மணிநேர சேவையை வழங்கும் (0094) 0112-2350000 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்கவும்.
சந்தேகத்துக்கிடமான பரிமாற்றல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பாக தெரிந்துகொள்வதற்கு, உங்களது அறிக்கைகளை அடிக்கடி பரிசோதிப்பதும் மிக முக்கியமானதாகும். DFCCகடனட்டைகள், உங்களது பரிமாற்றல்களுக்கான குறுஞ்செய்தி வசதிகளையும் மின்னஞ்சல் அறிக்கைகளையும் வழங்குகின்றது.
கடனட்டையின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை வாசிப்பதற்கு தவறுதல்
நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய ஒரு ஆவணத்தை வாசிப்பது, அனைவருக்கும் சலிப்பையே ஏற்படுத்தும். ஆனால், கடனட்டையிலாவது, இதை வாசிக்கவேண்டியது மிக அவசியமானதாகும். நீங்கள் எதற்கு ஒப்புக்கொள்கின்றீர்கள் மற்றும் எதற்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளீர்கள் என்பது பற்றி நீங்கள் அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். எனவே, நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து நீங்கள் அறிந்து வைத்திருத்தானது, கடனட்டையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் பயன்படுத்தி, தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவதில் இருந்து உங்களைப் பாதுகாத்தக்கொள்ள உதவும்.
இந்த தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம், உங்களது கடனட்டையில் கிடைக்கும் அனைத்துச் சலுகைகளையும் வாய்ப்புகளையும் சுதந்திரமாக உங்களால் பயன்படுத்தமுடியும். தகுதியான வாழ்க்கையை வாழ்வதற்கே, வாழ்க்கை கிடைத்தது இல்லையா?.