
நிர்வாக சபை
Established in 1955 with a mandate to spearhead development financing in a newly independent nation, DFCC Bank PLC has over the past 60 years grown, evolved and diversified to meet the changing needs and aspirations of an emerging economy

திரு. ஜே. துரைரட்னம் - தலைவர்
2018 ஓகஸ்ட்டில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபை அங்கத்தவராகவும் 2019 ஜூலையில் அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
திரு.துரைரட்னம் இலங்கை கொமர்ஷல் வங்கி பி.எல்.சி.யில் 36 ஆண்டுகள் சேவையாற்றியதன் மூலம் வங்கிச் சேவைகளில் விரிவான அனுபவத்தைப் பெற்றுள்ளார். இலங்கை கொமர்ஷல் வங்கியில் 2012 ஏப்பிரல் முதல் 2014 ஜூலை வரை பணிப்பாளராகவும் அதன் பின்னர் 2018 ஜூலை 26ஆம் திகதி ஓய்வுபெறும் வரை முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அவர் கடமையாற்றினார்.
திரு.துரைரட்னம் இலங்கை கொமர்ஷல் வங்கியில் இருந்தபோது பிரதம செயற்பாட்டு அதிகாரி, பிரதிப் பொது முகாமையாளர் – சர்வதேசம், உதவிப் பொது முகாமையாளர் – சர்வதேசம் மற்றும் இறக்குமதிகள் பிரதானி போன்ற வேறு பல சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகளையும் வகித்துள்ளார். அவர் பெற்றுள்ள அனுபவம் சர்வதேச வர்த்தகம் கடல்கடந்த வங்கிச் சேவை கொடுகடன் மற்றும் வங்கிச் செயற்பாடுகளின் சகல துறைகளையும் உள்ளடக்கும். கொமர்ஷல் டிவலப்மன்ட் கம்பனி பி.எல்.சி.யின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ள அவர் லங்கா ஃபினான்ஸ் சேர்விசஸ் பியிரு லிமிட்டட்டின் சபையில் ஒரு பணிப்பாளராகவும் அங்கத்துவம் வகித்துள்ளார்.
திரு.துரைரட்னம் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானமாணி பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து உயர்நிலை டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

திரு. எல்.எச்.ஏ.எல். சில்வா - பிரதான நிறைவேற்று அதிகாரி
2015 ர்ரில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபை அங்கத்தவராகவும் 2017 ஓகஸ்ட்டில் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.
திரு.சில்வா பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பதவியேற்பதற்கு முன்னர் 2015 ஒக்டோபர் 1ஆம் திகதி வரை DFCC வங்கி பி.எல்.சி.யின் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றினார்.
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த திரு.சில்வா 1987ஆம் ஆண்டு DFCC வங்கிக் குழுமத்தில் இணைந்தார். 2003ஆம் ஆண்டு DFCC வங்கியிலிருந்து DFCC வர்தன வங்கி பி.எல்.சி.க்கு (டிவிபி) சேவை மாற்றம் செய்யப்பட்ட அவர் 2003க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் டிவிபியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாகக் கடமையாற்றினார். அதன் பின்னர் 2010 ஜனவரிக்கும் 2015 செப்டெம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் DFCC வர்தன வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்தார். லங்கா ஃபினான்ஸ் சேர்விசஸ் பியிரு லிமிட்டட் இலங்கை வங்கியாளர்கள் சங்க (உத்தரவாத) லிமிட்டட் சினப்சிஸ் லிமிட்டட் அக்குயிட்டி பாட்னர்ஸ் (பிறைவேட்) லிமிட்டட் அக்குயிட்டி சிக்யுரிட்டீஸ் லிமிட்டட் லங்கா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ் லிமிட்டட் லங்கா வென்சர்ஸ் பி.எல்.சி டுஏடு எனர்ஜி நிதிய லிமிட்டட் DFCC கொன்சல்டிங் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின் பணிப்பாளராக இருக்கும் அவர் இலங்கை தொழில்சார் வங்கியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
திரு.சில்வா களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து வணிகத் துறை விசேட பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிலையத்திலிருந்து வியாபார நிர்வாகத்தின் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

திரு. பி.எம்.பீ. பெர்னாண்டோ - சிரேஷ்ட பணிப்பாளர்
2013 ஜூலையில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திரு.பெர்னாண்டோ லாஃப்ஸ் லுப்ரிகன்றஸ் லிமிட்டட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஏசியா அசெற் ஃபினான்ஸ் பி.எல்.சி.யின் நிறைவேற்றுத் தரத்திலில்லாத சுயாதீனப் பணிப்பாளரும் ஆவார்.
முன்பு போர்ட் ரோட்ஸ் தோர்ன்டன் அன்ட் கம்பனியின் முன்னாள் பங்காளியான அவர் நிதிச் சேவைகள் துறையில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். கொன்பிபி குழுமத்தின் நிதிப் பணிப்பாளராகவூம் ஆசியப் பிராந்திய வேர்டூஸா (பிறைவேட்) லிமிட்டட்டின் நிதிப் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார். 2005ஆம் ஆண்டில் அவர் கெப்பிட்டல் ரீச் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனார். கெப்பிட்டல் ரீச் குழுமத்தின் செயற்பாடுகள் சொவ்ட்லொஜின் ஃபினான்ஸ் பி.எல்.சி யின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சொவ்ட்லொஜின் ஃபினான்ஸ் பி.எல்.சி யின் பணிப்பாளர் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
திரு.பெர்னாண்டோ இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிலையம் பிரிட்டனின் முகாமைத்துவக் கணக்காளர்களின் பட்டய நிலையம் ஆகியவற்றின் சக உறுப்பினர் ஆவார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானமாணி (பிரயோக விஞ்ஞானம்) பட்டத்தைப் பெற்றுள்ளார்.

திருமதி எஸ்.ஆர். தம்பிஐயா - பணிப்பாளர்
2015 மார்ச்சில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திருமதி தம்பிஐயா ரேணுகா ஹொட்டேல்ஸ் லிமிட்டட் ரேணுகா சிற்றி ஹொட்டேல்ஸ் பி.எல்.சி. என்பவற்றின் இணை முகாமைத்துவப் பணிப்பாளராக இருக்கிறார். அவர் இப் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன் 2001ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ரேணுகா சிற்றி ஹொட்டேல்ஸ் பி.எல்.சி.யின் பொது முகாமையாளராகப் பதவி வகித்தார். கார்கோ போட் டிவலப்மன்ற் கம்பனி பி.எல்.சி. கிரசன்ற் லோண்டரர்ஸ் அன்ட் ட்ரை கிளீனர்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்இ ரேணுகா கொன்சல்டன்ட்ஸ் அன்ட் சேர்விசஸ் லிமிட்டட் ரேணுகா புரப்பட்டீஸ் லிமிட்டட் லங்காஸ்டர் ஹோல்டிங்ஸ் லிமிட்டட்இ போட்ஃபோலியோ மனேஜ்மன்ற் சேர்விசஸ் (பிறைவேட்) லிமிட்டட் ரேணுகா லான்ட் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றிலும் அவர் பணிப்பாளராக இருக்கிறார். 2012 செப்டெம்பருக்கும் 2015 பெப்ரவரிக்கும் இடையே அவர் DFCC வர்தன வங்கி பி.எல்.சி.யின் பணிப்பாளராகவும் பதவி வகித்தார்.
திருமதி தம்பிஐயா ஐக்கிய இராச்சியத்தின் நொட்டிங்காம் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளியல் துறையில் இளமாணி (சிறப்பு) பட்டத்தையும் ஐக்கிய அமெரிக்கா கோர்னல் பல்கலைக்கழகத்தின் ஹொட்டேல் நிர்வாகப் பாடசாலையிலிருந்து முகாமைத்துவ முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

திருமதி வீ.ஜே. சேனாரத்ன - பணிப்பாளர்
2015 ஜூலையில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திருமதி சேனாரத்ன தற்சமயம் இலங்கை டிஸ்ட்டிலாPஸ் பி.எல்.சி.யின் பிரதம சட்ட அதிகாரி மற்றும் கம்பனிச் செயலாளர் பெரிசில் (பிறைவேட்) லிமிட்டட்டின் கம்பனிச் செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கின்றார். பரடைஸ் ரிஸோட் பாசிக்குடா (பிறைவேட்) லிமிட்டட், அமெதிஸ்ட் லெஷர் லிமிட்டட் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் மெல்ஸ்டாகோர்ப் லிமிட்டட் இலங்கை டிஸ்ட்டிலரிஸ் கம்பனி பி.எல்.சி. ஆகியவற்றின் மாற்றுப் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றுகின்றார்.
37 ஆண்டுகால தொழில்சார் அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் வழக்காடுதல், வணிகச் சட்டம், சொத்துக் கைமாற்ற ஆவணங்களின் தயாரிப்பு, கம்பனிச் செயலக நடைமுறைகள் ஆகியவற்றில் நன்கு பரிச்சயமானவர். 2003 மே முதல் 2009 வரை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் கம்பனிச் செயலாளராக இருந்த அவர் இலங்கை மத்திய வங்கியின் சட்ட அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டத்தரணி மற்றும் பிரசித்த நொத்தாரிஸ் சத்தியப் பிரமாண ஆணையாளர் ஆகிய தகைமைகளைக் கொண்டுள்ள திருமதி சேனாரத்ன 1977 ஓகஸ்ட் 25ஆம் திகதி சட்டத்தரணியாகச் செயலாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டார். அவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் வழக்கறிஞரும் ஆவார்.

திருமதி எல்.கே.ஏ.எச். பெர்னாண்டோ - பணிப்பாளர்
2017 நவம்பரில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திருமதி பெர்னாண்டோ பட்டயக் கணக்காளர்களின் நிறுவனமான கிரான்ட் தோர்ன்டன் இன்டர்நஷனலின் இலங்கைப் பிரதிநிதியாள கிரெஸ்டன் எம்ன்ஸ் அன்ட் கம்பனியில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். கணக்கியல் நிதி மற்றும் முகாமைத்துவத் துறைகளல் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.
தற்சமயம் அவர் ஆர் ஐ எல் புரப்பட்டி பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணிபுரிகின்றார். ரெடிவெயர் இன்டஸ்ட்ரிஸ் லிமிட்டட் ஃபூட்புஸ் (பிறைவேட்) லிமிட்டட் ஆர் ஐ எல் ட்ரஸ்ட் லிமிட்டட் யூனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பி.எல்.சி. டிவிஎஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டட் யூனிமோ என்டர்பிறைசஸ் லிமிட்டட் ஓரியன்ற் மோட்டர் கம்பனி லிமிட்டட் யு எம் எல் ஹெவி இக்விப்மன்ற் லிமிட்டட் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் அவர் பதவி வகிக்கின்றார். யூனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பி.எல்.சி.யின் கணக்காய்வுக் குழுவின் தலைவராகவும் சேவையாற்றுகின்றார்.
திருமதி பெர்னாண்டோ இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிலையத்தின் பேராளரும் இலங்கை சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்கள் நிலையத்தின் அங்கத்தவரும் ஆவார்.

திரு. என்.கே.ஜி.கே. நெம்மாவத்த - பணிப்பாளர்
2018 டிசெம்பரில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திரு.என்.கே.ஜி.கே.நெம்மாவத்த தற்சமயம் சுற்றுலா வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சில் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) என்ற பதவியை வகிக்கின்றார்.
அவர் இதற்கு முன்னர் அரசாங்கத் துறையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். நிதி அமைச்சின் பொதுத் தொழில் முயற்சிகள் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் சுற்றாடல் துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் என்பன அவற்றுள் அடங்கும். இலங்கை சமுர்த்தி அதிகார சபை இலங்கை சுங்கத் திணைக்களம் வர்த்தக தீர்வை மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
திரு.நெம்மாவத்த கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகத் துறை இளமாணி (சிறப்பு) பட்டத்தைப் பெற்றவராவார். கொழும்புப் பல்களைக்கழகத்திலிருந்து அதிகாரப் பரவலாக்கம் மற்றும் உள்ளுராட்சி ஆய்வூகள் தொடர்பான பட்டபின்படிப்பு டிப்ளோமாவையும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்திலிருந்து முகாமைத்துவத் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் இலங்கைப் பட்டயக் கணக்காளர்கள் நிலையத்தின் உரிமச் சான்றாளரும் ஆவார்.

திரு.N H T I பெரேரா - நிர்வாக இயக்குனர்
ஜுலை 2019இல் DFCC வங்கி பிஎல்சி நிர்வாகசபைக்கு நியமிக்கப்பட்டார்.
திரு.திமால் பெரேரா 2017 ஜுன் 15 முதல் DFCC வங்கி பிஎல்சி இன் பிரதி பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றினார். ஹற்றன் நஷனல்வங்கி,Barclays வங்கிபிஎல்சி,கொமர்ஷல் வங்கி கட்டார், HSBC குழுமம் இலங்கை & வெளிநாட்டு போன்ற வங்கிக்கிளைகளில் சிரேஷ்ட பதவிகளை வகித்ததன் ஊடாக பரந்துப்பட்ட அனுபவங்களை கொண்டுள்ளார்.
இவர் Acuity Partners Ltd, Synapsys Ltd., and Acuity Stock Brokers (Pvt) Ltd ஆகியவற்றின் ஓர்பணிப்பாளரும் ஆவார்.HNB Assurance Plc, HNB General Insurance Ltd and HNB Grameen Finance Ltd ஆகியவற்றின் ஓர்சபை அங்கத்தவராகவும்சேவையாற்றிஉள்ளார்.
திரு.பெரேரா அவர்கள் இலங்கை பட்டயக்கணக்காளர்சபையின் அங்கத்தவராக உள்ளதுடன் அத்தோடு பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின்முகாமைத்துவக்கணக்கியல் (CIMA) –UK கல்வியினை நிறைவு செய்துள்ளார்.