DFCC “அனைவருக்கும் ஆங்கிலம்” என்ற வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு முயற்சி, நாடு முழுவதும் ஆங்கில மொழி மற்றும் மென் திறன்கள் பயிற்சியுடன் இளைஞர்,யுவதிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது
February 16, 2023
DFCC வங்கியானது பரந்தளவில் பெருமளவானோருக்கு பலனளிக்கும் அதன் நிலைபேற்றியல் மூலோபாயத்தால் வழிநடத்தப்படுகின்ற “அனைவருக்கும் ஆங்கிலம்”, என்ற சமூக ஆதரவு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை தொடர்ந்து 5 வது ஆண்டாக முன்னெடுத்துள்ளது. இது மீள்எழுச்சித்திறன் கொண்ட சமூகங்களுக்கு பங்களிக்கும் வகையில், வங்கியின் நிலைபேற்றியல் குறிக்கோளின் கீழ் 6 வேறுபட்ட கருப்பொருள்களில் ஒன்றான “கல்வி” எனும் தூணில் வங்கியின் பிரதான செயல்திட்டமாகும்.
இந்த ஆண்டு, நடைபெற்றுவரும் நிகழ்ச்சித்திட்டங்கள், அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சையை பூர்த்தி செய்த 18-25 வயதுடைய இளைஞர்,யுவதிகளுக்கு ஆங்கில மொழி மற்றும் மென் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் மூலம் வலுவூட்டுகிறது.
கடந்த ஆண்டுகளில், 2017 முதல் 2021 வரை, DFCC வங்கியின் அனைவருக்கும் ஆங்கிலம் நிகழ்ச்சித் திட்டமானது கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், காலி, அம்பாறை, இரத்தினபுரி, பொலன்னறுவை, யாழ்ப்பாணம், பதுளை, அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் 350 இற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகளுக்கு நேரடியாகப் பயனளித்துள்ளது. இந்த திட்டம் DFCC வங்கியின் நீண்ட கால நிலைபேற்றியல் மூலோபாயத்தின் ஒரு பகுதி என்பதுடன், அதன் முக்கிய தூண்களில் ஒன்றான மீள்எழுச்சித்திறன் கொண்ட சமூகங்களை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா அவர்கள் இந்த முயற்சி தொடர்பில் விளக்குகையில்;, “ஒரு சமூகப் பொறுப்புணர்வுள்ள வங்கி என்ற வகையில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கூட, இளைஞர்,யுவதிகளுக்கு சிறந்த ஆங்கில அறிவு கணிசமான நன்மையை வழங்குகிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே, இலங்கையின் இளைஞர்,யுவதிகள் இந்தத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான ஆதரவையும், ஊக்கத்தையும் பெற வேண்டும் என்று DFCC வங்கி நம்புகிறது. இளைஞர்,யுவதிகளிடம் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக்கொள்வது அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் உலகத்திற்கு வழிகோல உதவுகிறது. இணையத்தின் மூலம் வரையறையற்ற தகவல் மற்றும் அறிவு உலகம் மற்றும் அவர்களை உலகளாவிய கண்ணோட்டத்துடன் சித்தப்படுத்த உதவுகிறது. எனவே, தொடர்ந்து 5 வது ஆண்டாக இந்த திட்டத்தை தொடர்வதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
DFCC அனைவருக்கும் ஆங்கிலம் நிகழ்ச்சிகள் சராசரியாக 4 மாதங்கள் நீடிக்கும் என்பதுடன், DFCC வங்கியின் சார்பாக Gateway Language Institute கற்கை நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தில் பொது திறன்கள் மேம்பாடு பற்றிய ஒரு தொகுதியும் இருக்கும், இது பங்கேற்பாளர்களைக் கவருவதை மேலும் அதிகரிக்க உதவும். இப்பயிற்சியின் ஆங்கிலத்தில் உரையாடுதல் பிரிவு மூன்று மாதங்களுக்கு நடத்தப்படுவதுடன், இதில் தகவல் தொடர்பாடல் திறன், அடிப்படை இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு, செவிமடுத்தல் திறன், வாசிக்கும் திறன் மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் தொழில் சந்தையில் தேவைப்படும் பயிற்சி மற்றும் ஜோடி மற்றும் அணி மட்ட பணி உட்பட செயல்பாடு சார்ந்த கற்றல் ஆகியவை அடங்கும். பாடநெறியின் மென் திறன்கள் பிரிவு ஒரு மாதத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், குழுப்பணி, நேர முகாமைத்துவம், படைப்பாக்க விளக்கக்காட்சி, எழுதும் திறன் மற்றும் நேர்காணலை எதிர்கொள்வதற்கான திறன்களை அவர்களுக்கு வழங்குதல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. இக்கற்கைக்கான விண்ணப்பங்கள் DFCC கிளைகள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை கிளை வலையமைப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்படுகின்றன என்பதுடன், ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், DFCC வங்கி மற்றும் Gateway Language Institute கற்கைநிலையம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலப் பேச்சு மற்றும் மென் திறன் மேம்பாட்டிற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்பதுடன், பாடநெறி மற்றும் அனைத்து பாடவிதானப் பொருட்களையும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் உரிமையைப் பெறுவார்கள். அவர்கள் வங்கியிடமிருந்து ஆரம்ப வைப்புத்தொகையுடன் கூடிய இலவச சேமிப்புக் கணக்கையும் பெறுவார்கள். இறுதி மதிப்பீட்டின் போது சிறப்பாகச் செயல்படும் பங்கேற்பாளர்களுக்கு DFCC வங்கியின் நாடளாவிய பரந்த கிளை வலையமைப்பிற்குள் உள்ளகப்பயிற்சிக்கான வாய்ப்புகளும் வழங்கப்படும்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலை பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.