DFCC ஆலோக நிதியியல் அறிவு அமர்வுகள் மட்டக்களப்பு மற்றும் பதுளையில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டியுள்ளன
October 30, 2023
நிதியியல் அறிவு என்பது இலங்கையில் பெண் தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுக்கும் பாரிய சவாலாக காணப்படுகின்றது. முற்றிலும் பெண்களுக்கான நிதியியல் தீர்வான DFCC ஆலோக, இதனை இனங்கண்டு, நிதி உதவி மற்றும் பெறுமதிமிக்க நிதி அல்லாத நன்மைகளை வழங்கி, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தனது ஆதரவை நீட்டித்துள்ளது. இந்த வகையான முயற்சிகள் மத்தியில் நாடெங்கிலும் அறிவுப் பகிர்வு அமர்வுகள் மூலமாக விழிப்புணர்வைப் பரப்பி வருகின்ற DFCC ஆலோக நிதியியல் அறிவு அமர்வுகளின் நிகழ்வுகள் அண்மையில் மட்டக்களப்பிலும், பதுளையிலும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய முயற்சிகளினூடாக, உத்வேகமளிக்கும் பெண்களின் தொழில் முயற்சிகளை தேசத்தின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் வெற்றிச் சரித்திரங்களாக மாற்றுவதற்கான இலவச வணிக ஆலோசனை உதவி மற்றும் அறிவுப் பகிர்வை DFCC வங்கி அவர்களுக்கு வழங்கி வருகின்றது.
முன்னுரிமை வட்டி வீதங்கள், சலுகைக் கட்டணங்கள் மற்றும் தரகுப்பணங்களை பிரத்தியேகமாக பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு வழங்கி, வங்கித்துறையில் அவர்களது ஈடுபாட்டை ஊக்குவித்து, அனுசரணையளிப்பதில் DFCC ஆலோக தனித்துவம் மிக்கது. இலங்கையில் பெண்களுக்கு சொந்தமான வணிகங்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கணிசமான பங்கினர் வங்கிச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களாகவோ அல்லது வங்கிச்சேவை மிகவும் குறைவான மட்டத்தில் கிடைக்கப்பெறுகின்றவர்களாகவோ காணப்படும் நிலைமை, இத்தகைய முயற்சிகளுக்கான முக்கியமான தேவையை எடுத்தியம்புகின்றது.
பெண்கள் மீது DFCC வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்திய தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் சிரேஷ்ட உப தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கூறுகையில், “வணிகத்தில் பெண்களின் ஆற்றல் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதில் நாம் ஓயாத அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், அவர்களின் நிதியியல் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு உதவ நாம் தயாராகவுள்ளோம். எமது நிலைபேண்தகைமை மூலோபாயத்தின் வழிகாட்டலுடன், பெண்களை வலுவூட்டுவதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ள, பரந்துபட்ட, சமத்துவமான மற்றும் உள்ளடக்கமான சமுதாயத்தை வளர்ப்பதில் DFCC வங்கி அர்ப்பணிப்புடன் உள்ளது. இத்தகைய முயற்சிகளினூடாக, நிலைபேற்றியல் கொண்ட நிதி மூலமாக இலங்கையில் அனைத்து மக்களதும் சிறப்பான மற்றும் வலுவான எதிர்காலத்திற்குப் பங்களிப்பாற்றுவதற்கு நெகிழ்திறன் கொண்ட சமூகங்களை நாம் இலங்கையில் தோற்றுவித்து வருகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
மட்டக்களப்பிலும், பதுளையிலும் அண்மையில் இடம்பெற்ற DFCC ஆலோக நிதியியல் அறிவு அமர்வுகளை அவற்றில் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றிய அனைவரும் போற்றியுள்ளதுடன், DFCC வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் மதிப்பிற்குரிய அதிதிகள் பலரும் இவற்றில் கலந்து சிறப்பித்துள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான பாரதி கென்னடி அவர்கள் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு ஆழமான அறிவுபூர்வமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். DFCC வங்கியின் உப தலைவரும், Pinnacle சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன், பிராந்திய முகாமையாளர் கந்தையா ஜெகராஜா, ஆலோக சிரேஷ்ட திட்ட முகாமையாளரான ருவனி வீரசிங்க மற்றும் மட்டக்களப்பு கிளை முகாமையாளரான கந்தையா குகதாசன் உள்ளிட்ட ஏனைய பல பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் சந்தன கருசிங்க அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு, “நிதி அறிவு மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக நிதியை நிர்வகித்தல்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் வடிவிலான அமர்வை நடாத்தினார். DFCC வங்கியின் பிராந்திய கடன் மையத்திற்கான உதவிப் பிராந்திய முகாமையாளரான நிலூஷா விக்கிரமகே அவர்கள் பெண்களுக்குக் கிடைக்கின்ற மீள்நிதிவசதிக் கடன் திட்டங்கள் மற்றும் நிதி வசதித் தெரிவுகள் மூலமான கடன் வாய்ப்புக்கள் தொடர்பில் விரிவான படைப்பாக விளக்கத்தை நிகழ்வில் வழங்கினார். ஷேரா ஹசன், ருவனி வீரசிங்க மற்றும் பதுளை கிளை முகாமையாளர் துமிந்த யாப்பா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதில் கவனம் செலுத்தி, இலங்கையில் நிதியியல் அறிவு மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் DFCC ஆலோகவின் அர்ப்பணிப்பை இந்நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன.
பெண்களை மையமாகக் கொண்ட, முழுமையான வங்கிச்சேவைத் தீர்வான DFCC ஆலோக, அபிலாஷைகளைக் கொண்ட இலங்கைப் பெண்கள் வெற்றி காண்பதற்குத் தேவையான நிதியியல் கருவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது. பெண்களை மையமாகக் கொண்ட சலுகைகளுடன், பிரத்தியேக இலச்சினை பொறிக்கப்பட்ட கடனட்டைக்குப் புறம்பாக, DFCC ஆலோக கணக்குதாரர்கள் பல்வேறு தனித்துவமான நன்மைகளுடன் முழுமையான வங்கிச்சேவைகளையும் அனுபவிக்க முடியும். ரூபா 1,000/- என்ற மிகவும் குறைந்த ஆரம்ப வைப்பு, முன்னுரிமை அடிப்படையிலான வட்டி வீதங்கள், நாடெங்கிலுமுள்ள எந்தவொரு DFCC அல்லது LankaPay ஏடிஎம் மையங்களில் கட்டணமின்றி பணத்தை மீளப்பெறும் வசதி, பிள்ளைப்பேறு, திருமணம், பட்டமளிப்பு போன்ற வாழ்வின் முக்கிய தருணங்களில் வெகுமதிகள், டிஜிட்டல் வங்கிச்சேவைத் தீர்வுகள், MTeller மூலமாக சௌகரியமான, பாதுகாப்பான வீட்டு வங்கிச்சேவைகள் போன்றவை இதில் அடங்கியுள்ளன. முன்னுரிமை அடிப்படையிலான வட்டி வீதங்களுடன் அடகு வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சேமிப்பில் உள்ள தொகையை விட 10 மடங்கு வரையான இலவச ஆயுள் காப்புறுதி, கணக்குதாரர் மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் 3 பேருக்கு Doc990 இன் கூட்டாண்மையுடன் இலவச டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகள் போன்ற வசதிகளையும் அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இந்த நன்மைகள் அனைத்திற்கும் மேலாக, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு மானியங்கள் அடங்கலாக நிதி ஏற்பாடுகளுக்கும் DFCC ஆலோக அனுசரணையளிக்கின்றது.
மேலும், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது பெண் தொழில்முயற்சியாண்மையை வலுப்படுத்துகின்ற முயற்சிகள் அடங்கலாக, நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ மற்றும் Euromoney இன் ‘Market leader in Cash Management 2021’ உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.