DFCC வங்கி கிரிக்கெட் அணி, மேர்கன்டைல் கிரிக்கெட் C பிரிவு லீக்கில் 2023 க்கான வெற்றிக்கிண்ணத்தை வென்றுள்ளது
August 18, 2023
இலங்கையின் வங்கித்துறையில் முன்னோடியாகத் திகழும் DFCC வங்கி, இம்முறை கிரிக்கெட் ஆடுகளத்தில் மீண்டும் ஒரு தடவை மேன்மையின் உச்சத்தை எட்டியுள்ளது. DFCC வங்கி கிரிக்கெட் அணி சமீபத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான மேர்கன்டைல் கிரிக்கெட் சங்கத்தின் C லீக் பிரிவு வெற்றிக்கிண்ணத்தை வென்றதன் மூலம் வரலாற்றில் தமது பெயரைப் பதித்து, இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது அணியின் மிகச்சிறப்பான கிரிக்கெட் திறமையை எடுத்துக்காட்டுவதோடு, பணி-குடும்ப வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தும் வங்கியின் நெறிமுறைகளை எதிரொலிக்கிறது. பணிக்கு அப்பாற்பட்ட சாதனைகளை ஆதரிப்பது மற்றும் நிலைபேண்தகு வாழ்க்கை முறைகளுக்கு ஆதரவளிப்பது வங்கியின் நெறிமுறைகளாக உள்ளன.
இந்த வெற்றிகரமான வெற்றிக்கான பயணம் ஓயாத உறுதிப்பாடு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் மிகச்சிறந்த கிரிக்கெட் திறமை ஆகியவற்றைக் குறிக்கிறது. மாபெரும் இறுதிப்போட்டியானது DFCC வங்கிக்கும் நவலோக வைத்தியசாலைக்கும் இடையிலான பரபரப்பான போட்டியாக மாறியதுடன், இது இரு தரப்பிலும் உள்ள விளையாட்டுத்திறன் மற்றும் தோழமையின் உண்மையான உணர்வை எடுத்துக்காட்டியது. எவ்வாறாயினும், நவலோக வைத்தியசாலையினால் நிர்ணயிக்கப்பட்ட 136 ஓட்டங்கள் என்ற வெற்றிக்கான இலக்கை விரட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஈட்டியதன் மூலம், DFCC வங்கியின் கிரிக்கெட் திறமைகள் பிரகாசமாக வெளிப்பட்டன.
இந்த குறிப்பிடத்தக்க சாதனையை பிரதிபலிக்கும் வகையில், DFCC வங்கி கிரிக்கெட் அணியின் தலைவர் சமோத் விக்கிரமசிங்க கருத்து வெளியிடுகையில், “வெற்றிக்கிண்ணத்தை ஈட்டுவதற்கான எமது பயணம், DFCC வங்கி மற்றும் கிரிக்கெட் ஆகிய இரண்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் அர்ப்பணிப்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் மேன்மைக்கான தாகம் ஆகிய விழுமியங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வெற்றியானது வெறும் கிரிக்கெட் வெற்றியின் அடையாளமாக இல்லாமல், சாதாரண சாதனைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் சாதனைகளை வளர்ப்பதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பின் ஒரு கொண்டாட்டமாகும். எமது திறமையை சோதித்து, எம்மை நிரூபித்து, எமக்கு எதுவும் சாத்தியம் என்பதை காண்பிக்க இடமளித்த எமது எதிரணி எமக்கு வழங்கிய மிகுந்த சவால்களுக்காக நாம் மகிழ்ச்சியடைவதுடன், அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்!” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கிக்கு பல மறக்கமுடியாத தருணங்களுடன் இந்த வெற்றிக்கான பாதை வகுக்கப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் கொமர்ஷல் வங்கிக்கு எதிராக 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி, LOLC Holdings க்கு எதிரான நெருக்கமான போட்டியில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியில் முடிந்தமை மற்றும் Airport and Aviation அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாரிய வெற்றி பெற்றமை என பல சுவாரசியங்கள் இதில் அடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து நவலோக வைத்தியசாலைக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் க்கு எதிராக 161 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு அற்புதமான வெற்றி, DPMC க்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி மற்றும் அரையிறுதியில் LOLC Holdings க்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஈட்டிய உற்சாகமான வெற்றி, இறுதியாக மாபெரும் இறுதிப்போட்டியில் நவலோக வைத்தியசாலைக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புகழ்பெற்ற வெற்றியுடன், இறுதியில் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது!
வெற்றிக்கிண்ணத்தைப் பெறுவதற்கு அப்பால், அணி குறிப்பிடத்தக்க வகையில் தனிப்பட்ட பெறுபேறுகளையும் ஈட்டியது, ரவிந்து ரத்நாயக்கவுக்கு C லீக் பிரிவில் “சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான” பட்டம் வழங்கப்பட்ட அதே நேரத்தில், நிபுன் பிரேமரத்ன “சிறந்த பந்துவீச்சாளர்” என்ற அவருக்கே உரித்தான அங்கீகாரத்தைப் பெற்றார். அதேவேளை, ரவிந்து ரத்நாயக்க அவர்கள் எவ்விதமான மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமின்றி “தொடரின் ஆட்ட நாயகனாக” பிரகாசித்தார். மேலும், நிபுன் பிரேமரத்ன “இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன்” என்ற புகழ்மிக்க பட்டத்தைப் பெற்றார்.
அணியின் சாதனைகள் குறித்து பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய DFCC கிரிக்கெட்டின் உதவித் தலைவர் – முகாமையாளரான லக்ஷித வீரசிங்க அவர்கள், “எமது அணியின் வெற்றியானது கிரிக்கெட், வங்கிச்சேவை மற்றும் வாழ்வில் எமது பணிப்பாளர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் பேரார்வத்திற்கு ஒரு சான்றாகும். எமது அணிக்கு நாம் வழங்கும் ஓயாத ஆதரவானது எமது அணி வெற்றியை ஈட்டி, சவால்களை வென்று மேலுயரவும், அவர்களின் தமது உழைப்பினை சிறப்பாக ஒன்றுதிரட்டி, தனித்தனியாகவும், கூட்டாகவும் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்றைச் சாதிக்க இடமளித்துள்ளது. எதிர்காலத்தில் அணியின் சிறப்பான செயல்பாடுகளை நாங்கள் எதிர்பார்த்துள்ளதுடன், இச்சுற்றுப்போட்டியில் DFCC கொடியை உயரத்தில் பறக்கச் செய்தமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
பணி-குடும்ப வாழ்க்கை சமநிலை, முழுமையான சாதனைகள் மற்றும் நிலைபேண்தகு வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பு இந்த குறிப்பிடத்தக்க கிரிக்கெட் வெற்றியுடன் ஆழமாக எதிரொலிக்கிறது. வங்கியின் விழுமியங்கள் வங்கித் துறையில் இருந்து கிரிக்கெட் களத்திற்கு தங்குதடையின்றி எதிரொலித்து, வாழ்க்கையை வளப்படுத்தி, மேன்மையை முன்னெடுக்கும் தனித்துவத்தை மெய்ப்பிக்கின்றது. கிரிக்கெட் களத்தில் அதன் வெற்றியானது, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்து விளங்குவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை நினைவூட்டுவதாக உள்ளது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இலங்கையில் DFCC வங்கியானது, Green Climate Fund (GCF) இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையின் முதன்முதல் மற்றும் தற்போதுள்ள ஒரே நிறுவனமாகும். இது இலங்கையின் காலநிலைத் தணிப்பு மற்றும் தழுவல் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான சலுகை நிதி வசதியை வழங்குகிறது. Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021 and 2022’ விருது அடங்கலாக ஏராளமான அங்கீகாரங்களை வங்கி சம்பாதித்துள்ளதுடன், Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.