DFCC வங்கி உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறிக்கும் வகையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் #BeatPlastic Pollution முயற்சியை மேற்கொண்டுள்ளது
June 13, 2023
கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தும் வங்கியின் முதன்மையான சுற்றுச்சூழல் நிலைபேற்றியல் முயற்சிகளில் ஒன்றான “சமுத்திரத்திற்கு வாழ்வளிப்போம்” முயற்சியின் மேம்பாட்டுடன், உலக சுற்றுச்சூழல் தினத்தை DFCC வங்கி கொண்டாடியுள்ளது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி முதியோர், கல்வி, உடற்பயிற்சி, அவசரகால நிவாரணம் மற்றும் தொழில் முயற்சியாண்மை ஆகியவற்றுடன், வங்கி கவனம் செலுத்தும் 6 தூண்களில் (6Es) ஒன்றாக இருக்கும் சுற்றுச்சூழல் தூணுடன் இந்த முயற்சி இணைந்துள்ளது. இது ஐக்கிய நாடுகளின் நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகளுடன், குறிப்பாக நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்கு 13 (காலநிலை நடவடிக்கை), நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்கு 14 (நீரடி வாழ்வு) மற்றும் நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்கு 15 (நிலத்தில் வாழ்வு) ஆகியவற்றுடன் ஒத்திசைகின்றது.
அந்தவகையில், உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் உலக சமுத்திர தினம் 2023 ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் Eco Spindles Private Limited ஆகியவற்றுடன் இணைந்து, உஸ்வெட்டகியாவ, பிரீத்திபுர கடற்கரையில் விரிவான கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வை DFCC வங்கி ஏற்பாடு செய்தது. உலக சுற்றுச்சூழல் தினம் 2023 ஆனது, #BeatPlasticPollution என்ற கருப்பொருளுடன் ஒன்றியதாக, கடலில் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை குறைப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வெற்றிகரமாக மேம்படுத்துவதற்கு வழிகோலும் வகையில் ஊழியர்கள், குடும்பத்தினர், வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் கலந்துகொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதன் ஓயாத அர்ப்பணிப்பை பெருமையுடன் மீண்டும் உறுதிப்படுத்தும் வாய்ப்பை DFCC வங்கி பயன்படுத்திக் கொண்டுள்ளது. DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம், சுற்றுச்சூழல் தூணின் கீழ் முகாமைத்துவத் தூதுவர் முன்னெடுப்பு முயற்சிகளுக்கு அமைவாக, சுற்றுச்சூழல் நேய வணிக கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வள செயல்திறனை உறுதி செய்வதற்கான முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறையை வங்கி செயல்படுத்தியுள்ளது. 6 தூண்களின் (6Es) கிடைப்பிரிவுகள் ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்த, முழுமையான மற்றும் பயனுள்ள அணுகுமுறையை உறுதி செய்வதற்காக DFCC வங்கியில் உள்ள சிரேஷ்ட முகாமைத்துவ அணியின் உறுப்பினரால் முன்னெடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் DFCC வங்கியின் நிலைபேற்றியல் வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயம் 2030 மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், இது DFCC வங்கியை பசுமை நிதி வழங்கலுக்கான வங்கியாக ஸ்தாபித்தல், நிலைபேண்தகு பணி-குடும்ப வாழ்க்கை முறைகளை வளர்த்தல் மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் மிகவும் நிலைபேண்தகு வங்கியாக வெளிப்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் நிலைபேற்றியல் மீது வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைத்த திமால் பெரேரா அவர்கள், “DFCC வங்கியில், ஒரு கூட்டாண்மை நிறுவனமாக எமது வெற்றிக்கு நிலைபேண்தகு நடைமுறைகள் மிக முக்கியமானவை என்று நாங்கள் நம்புகிறோம். சுற்றுச்சூழல் நேயம்மிக்க வணிக கட்டமைப்பை உள்வாங்கிக்கொள்வது, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு முயற்சிகளில் முதலீடு செய்வது மற்றும் வள செயல்திறனை உறுதிசெய்வதன் மூலம், உலகளாவிய நிலைபேறாண்மை இலக்குகளை அடைவதில் பங்களிக்கும் அதேசமயம், சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
இந்த முயற்சிகளுக்கு மேலதிகமாக, தனது “Rise & Shine” நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வீட்டுத்தோட்டத்தில் பங்குபெற தனது ஊழியர்களை DFCC வங்கி ஊக்குவிக்கிறது. தனிப்பட்ட மட்டத்தில் நிலைபேண்தகு நடைமுறைகளில் ஈடுபடுவது பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு பங்களிக்கிறது என்று வங்கி உறுதியாக நம்புகிறது. கழிவு முகாமைத்துவத்திற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, பொறுப்புணர்வுடனான கழிவு முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் அடிச்சுவட்டைக் குறைக்கும் நோக்கில், காகிதக் கழிவுகளை திறம்பட நிர்வகிக்க, குறைக்க, மீள்பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி (3R) கோட்பாடுகளை கடைப்பிடிக்கிறது.
நிலைபேண்தகு நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் DFCC வங்கி தொடர்ந்தும் மிகுந்த உறுதியுடன் உள்ளது. பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் பல பரிமாண நிலைபேற்றியலை நோக்கிச் செயற்படும் DFCC வங்கியானது, இலங்கையில் நிலைபேண்தகு நிதி வழங்கல் மற்றும் வணிகத்தில் முன்மாதிரி வரையறைகளை ஏற்படுத்தி வருவதுடன், அனைவருக்கும் பசுமையான மற்றும் இன்னும் நிலைபேண்தகு வகையிலான எதிர்காலத்திற்காக தீவிரமாக உழைத்து வருகிறது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.