
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கி அடகு வைப்பதற்கான நிகரற்ற வட்டி வீதங்களை வெளியிட்டுள்ளது – சந்தையில் உங்கள் மிகச் சிறந்த தெரிவு
August 3, 2023

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, சவாலான காலங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள் திருத்தத்திற்கு அமைவாக, “DFCC Ranwarama” அடகு வசதிகளுக்கான வட்டி வீதங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, அடகு முற்பணங்களுக்கு சந்தையில் மிகக் குறைந்த வட்டி வீதங்களை வழங்குவதன் மூலம் அவசர பணத் தேவைகளுக்கு முகங்கொடுப்பவர்களுக்கு மிகவும் தேவையான நிதி நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
DFCC Ranwarama வாடிக்கையாளர்கள் 24 கரட் தங்கம் மற்றும் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக மாதம் ஒன்றுக்கு 1.48% என்ற மிகவும் நியாயமான வட்டி வீதத்தை இப்போது அனுபவிக்க முடியும். மேலும், 24 கரட் நகைகளுக்கு ஒரு சவரணுக்கு ரூபா 110,000/- வரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிகரற்ற வட்டி வீதங்கள் மற்றும் தாராளமான முற்பன தொகைகள், சந்தையில் மிகச் சிறந்தவை என்பதுடன், அதிக கட்டணங்களைச் செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் விரைவாகவும் எளிதாகவும் நிதியைப் பெறுவதை உறுதிசெய்கின்றன. DFCC Ranwarama, அடகு வைத்தவற்றை மீட்டுக் கொள்வதற்கு 12 மாதங்கள் வரை அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இரகசியத்திற்கான உத்தரவாதம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுக்கான அதிகபட்ச பாதுகாப்பு என்பன வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற மன நிம்மதியை வழங்குகின்றன.
DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் வட்டி வீதக் குறைப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வீதங்களுக்கு அமைவாக, அடகு வைக்கும் வசதிகள் மீதான எமது மிகவும் குறைக்கப்பட்ட வட்டி வீதங்களுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்களில் பலர் எதிர்கொள்ளும் நிதிச் சவால்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதனாலேயே DFCC Ranwarama ஒரு சௌகரியமான மற்றும் வெளிப்படையான அடகு வைக்கும் தீர்வை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எங்கள் தனித்துவமான வாடிக்கையாளர் சேவையுடன் இணைத்து, எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதித் தேவைகளுக்கு உதவுவதற்காக, சந்தையில் மிகச்சிறந்த வட்டி வீதத்தை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
DFCC Ranwarama அடகு வசதிகளை பெற்றுக்கொள்ள, உங்களுக்கு அருகாமையிலுள்ள DFCC வங்கிக் கிளைக்குச் செல்லவும் அல்லது மேலும் விபரங்களுக்கு, www.dfcc.lk ஐப் பார்வையிடவும் அல்லது DFCC இன் 24 மணிநேர வாடிக்கையாளர் தொடர்பு மையத்தை +94(11)2350000 என்ற இலக்கத்தின் மூலமாக அழைக்கவும்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இலங்கையில் DFCC வங்கியானது, Green Climate Fund (GCF) இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையின் முதன்முதல் மற்றும் தற்போதுள்ள ஒரே நிறுவனமாகும். இது இலங்கையின் காலநிலைத் தணிப்பு மற்றும் தழுவல் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான சலுகை நிதி வசதியை வழங்குகிறது. Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021 and 2022’ விருது அடங்கலாக ஏராளமான அங்கீகாரங்களை வங்கி சம்பாதித்துள்ளதுடன், Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.