
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கி அறிமுகப்படுத்தும் Pinnacle MasterCard அட்டை பிரத்தியேக வரப்பிரசாதங்களுடனான வாழ்க்கைமுறைக்கு வழிகோலுகின்றது
December 7, 2023

பிரத்தியேகமான, தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் DFCC வங்கியானது தனது DFCC Pinnacle வாடிக்கையாளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள DFCC Pinnacle MasterCard கடனட்டையை அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. DFCC Pinnacle என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த வங்கிச்சேவையாக அமைந்துள்ளதுடன், இலங்கையில் பிரத்தியேகமயப்படுத்தப்பட்ட உயர் மட்ட வங்கிச்சேவைக்கு தொடர்ச்சியாக மீள்வரைவிலக்கணம் வகுப்பதற்கு பெயர்பெற்று விளங்கும் வண்ணம், பிரத்தியேகமான அங்கத்துவத்தைக் கொண்டது.
இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கெட் வீரரான மஹேல ஜெயவர்த்தன அவர்கள் இப்புதிய DFCC Pinnacle MasterCard அட்டையை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்துள்ளதுடன், இது மிகவும் விமரிசையான மாலைப்பொழுதாக மாறி அனைவருக்கும் மகிழ்வூட்டியது. DFCC வங்கியின் முக்கிய அதிகாரிகள், வங்கியின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவினர், ஏனைய மதிப்பிற்குரிய விருந்தினர்கள் இந்த விமரிசையான அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவுக்கான சிரேஷ்ட உப தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இது தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கருத்து வெளியிடுகையில், “வரப்பிரசாதங்கள் நிறைந்த உலகு மற்றும் பிரத்தியேகமான அணுகல் ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள DFCC Pinnacle MasterCard ஆனது, பெறுமதிமிக்க எமது DFCC Pinnacle அங்கத்தவர்களுக்கு ஒப்பற்ற சேவையை வழங்கும் எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. எமது அங்கத்தவர்களின் பிரத்தியேகமான வாழ்க்கை முறைகள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொண்டு, வரப்பிரசாதங்கள் நிறைந்த வங்கிச்சேவையின் அடுத்த மட்டத்திற்கு வழிகோலுவதற்காக பல்வேறுபட்ட சலுகைகள் மற்றும் பிரத்தியேகமான அணுகலை நாம் வடிவமைத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
கணக்கற்ற சலுகைகளைக் கொண்டுள்ள DFCC Pinnacle MasterCard கடனட்டை, DFCC Pinnacle வங்கிச்சேவை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Lounge Key மூலமாக 900 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களிலுள்ள இளைப்பாறும் சொகுசு விடுதிகளுக்கான இலவச அனுமதியை இந்த அட்டை வழங்குகின்றது. மனதிற்கு மேலும் நிம்மதியளிக்கும் விதத்தில், பிரதான மற்றும் இணை அட்டைதாரர்கள் வருடத்திற்கு நான்கு தடவைகள் இளைப்பாறும் சொகுசு விடுதிகளுக்கு இலவசமாக செல்ல முடிவதுடன், இலவச பிரயாணக் காப்புறுதியும் கிடைக்கப்பெறுகின்றது.
Global Data Roaming by Flexiroam, Mastercard Flight Delay Pass மற்றும் வட்டியின்றிய, கவர்ச்சியான இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் இந்த அட்டை மூலமாக பிரத்தியேகமாக கிடைக்கப்பெறுகின்றன. ரூபா 50,000/- க்கு மேற்பட்ட, ரூபா 200,000/- வரையான பரிவர்த்தனைகளுக்கு வட்டியின்றிய. 6 மாத கால தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். ரூபா 200,000/- க்கு மேற்பட்ட, ரூபா 2,000,000/- வரையான பரிவர்த்தனைகளுக்கு வட்டியின்றிய, 12 மாத கால தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வரப்பிரசாதங்களுக்கு மேலாக, எரிபொருள், உணவக விருந்து, பாவனைக் கட்டணக் கொடுப்பனவு, விமானப் பிரயாணம், பிரயாண முகவர்கள் மற்றும் வெளிநாடுகளில் செலவு செய்யும் போது பிரத்தியேகமாக 2% கூடுதல் பணமீளளிப்பு (cashback) சலுகையை அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்வதுடன், ஏனைய கொடுப்பனவுகள் அனைத்துக்கும் அவர்களுக்கு 1% பண மீளளிப்பு கிடைக்கின்றது. DFCC வங்கி அட்டைகளுக்கு வழங்கப்படுகின்ற ஒரு தனித்துவமான பெறுமதிசேர் வரப்பிரசாதமாக பணமீளளிப்பு சலுகை காணப்படுவதுடன், உண்மையான சேமிப்பை அனுபவித்து மகிழ்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கின்றது. இவ்வாறு வழங்கப்படும் பணமீளளிப்பை அவர்கள் தாம் விரும்பும் எந்தவொரு DFCC வங்கிக் கணக்கிற்கும் வரவு வைத்துக்கொள்ள முடியும்.
DFCC வங்கி இலங்கையில் உயர் வகுப்பு வங்கிச்சேவையின் தராதரங்களுக்கு தொடர்ந்தும் மீள்வரைவிலக்கணம் வகுத்து வருவதுடன், ஒப்பற்ற சேவையையும், பிரத்தியேக வரப்பிரசாதங்களையும் வழங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்பை DFCC Pinnacle MasterCard கடனட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
DFCC Pinnacle MasterCard மூலமாக வங்கிச்சேவையின் உச்சத்தை அனுபவியுங்கள். உங்களுடைய வாழ்க்கைமுறையை மேம்படுத்தி, வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி, சொகுசு அனுபவங்கள் நிறைந்த உலகினை அனுபவியுங்கள். DFCC Pinnacle அங்கத்தவராக மாறுவதற்கு நீங்கள் கொண்டுள்ள தெரிவுகளை அறிந்து கொள்வதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் 0112350000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக DFCC வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இடமிருந்து வலப்புறமாக: ஜுட் முத்தையா – உதவி உப தலைவர், Pinnacle Centre, DFCC வங்கி, தினுகி ஆரியதாச – Pinnacle உறவுமுறை முகாமையாளர், Pinnacle Centre, DFCC வங்கி, ஷேரா ஹசன் – உப தலைவர் – Pinnacle, கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரி, மஹேல ஜெயவர்த்தன, ஆசிரி இத்தமல்கொட – சிரேஷ்ட உப தலைவர் – தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் தலைமை அதிகாரி – DFCC வங்கி, டென்வர் லூயிஸ் – உப தலைவர்/அட்டை மையத்தின் தலைமை அதிகாரி, DFCC வங்கி, ஷலீந்ரி தர்மரட்ண – உதவி உப தலைவர், அட்டை மையம், DFCC வங்கி, றோய் அமல்டன் – தயாரிப்பு முகாமையாளர், Pinnacle மற்றும் Prestige, DFCC வங்கி.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ மற்றும் Euromoney இன் ‘Market leader in Cash Management 2022’ உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.