உங்களது கடனட்டைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது
October 7, 2019
உங்களது கொள்வனவுகளின் போது, முன்னரை விட இலகுவாக கட்டணங்களைச் செலுத்தும் முகமாகவே, கடனட்டை உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உங்கள் கடனட்டையிலுள்ள தகவல்களைப் பெற்று அதிலுள்ள பணத்தைக் கொள்ளையடிப்பதற்கான ஒரு சில சந்தர்ப்பங்களை, திருடர்களுக்கு இது வழங்குகின்றது.
உங்களது கடனட்டையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, இங்கே சில முக்கிய குறிப்புகளை வழங்குகிறறோம்:
உங்களது கடனட்டை இலக்கத்தின் இரகசியம் பேணுங்கள்
- மற்றைவர்கள் உங்களது கடனட்டையைப் பாரக்கும் வகையில், திறந்த பகுதியொன்றில், உங்களது கடனட்டையை வைக்காதீர்கள். உங்கள் கடனட்டையில் பின்புறத்திலுள்ள CVV இலக்கம் தொடர்பில் மிகுந்த கவனமாக இருங்கள்.
- வங்கியொன்றுக்கோ அல்லது நம்பகமான வணிகமொன்றுக்கோ, உங்களது தேவைக்காக கடனட்டையின் தகவல்களை வழங்குவதைத் தவிர, வேறு எந்தவொரு நபருக்கும், உங்களது கடனட்டை தகவல்களை தொலைபேசி மூலம் வழங்கவேண்டாம். DFCC வங்கி, வேறு எந்தவொரு நம்பகத்தன்மையான நிதி நிறுவனமோ அல்லது வேறு நிறுவனங்களோ, உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது கடனட்டை விவரங்களையோ அல்லது உங்களது தனிப்பட்ட விவரங்களையோ கேட்க மாட்டார்கள். அவ்வாறான அழைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தகவல்கள் கேட்கப்பட்டால், நம்பகத்தன்மையாக இருந்தாலும் கூட, உங்களது தகவல்களை வழங்கவேண்டாம்.
- கடதாசி மூலமான அறிக்கைகளைத் தவிர்ப்பதன் மூலம், இந்தச் சூழலைப் பாதுகாக்க முடியும் என்பதுடன், அந்த அறிக்கைகளை மூன்றாம் நபரொருவர் பார்வையிட்டு, அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் உங்களால் தவிர்த்துக்கொள்ள முடியும். DFCC கடனட்டைகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது, மின் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் தகவல்களை தற்போதைய நிலையில் பேணுங்கள்
நீங்கள், உங்களது முகவரி அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றினால், அது குறித்து வங்கிக்கு அறிவிப்பதை மறந்துவிடவேண்டாம். இதன்மூலம், உங்களது தகவல்கள் வெறொரு நபரிடம் செல்வதைத் தவிர்த்துககொள்வதுடன், பிரச்சினைகள் ஏற்படும்போது, வங்கி தொடர்ந்து உங்களுடன் தொடர்பை பேணுவதற்கும் இலகுவாக இருக்கும். அத்துடன், நீங்கள் நீண்டகாலத்துக்கு வெளிநாட்டில் தங்கியிருப்பதற்காக செல்கின்றீர்கள் என்றால், அது குறித்தும் வங்கிக்கு அறிவிக்க மறந்துவிடவேண்டாம்.
பாதுகாப்பான சாதனங்கள்
கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது, நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்காவிடின், கடனட்டைகளை பயன்படுத்தும் சாதனங்கள் பாதுகாப்புக்கான பலவீனமாக இணைப்பை ஏற்படுத்தும். அதனால்:
- வலையமைப்புகள் குறித்து உறுதியாக இருங்கள்.
- இயக்க முறைகள், இணைய மோலோடிகள் உள்ளிட்ட அனைத்துச் செயலிகளும் புதுப்பித்த நிலையிலேயே உள்ளது என்தைப் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
- தீங்கை ஏற்படுத்தும் தாக்குதல்கள் அல்லது பல்வேறான கண்காணிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, அன்டிவைரஸ், அன்டிமல்வயார், அன்டிஸ்பைவயார் போன்ற பாதுகாப்பு மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள்.
- உங்களது கடவுச்சொற்களை எப்போதும் பாதுகாப்பாகவும் உறுதியானதாகவும் அடிக்கடி மாற்றியும் வைத்திருங்கள். நல்ல கடவுச்சொல்கள், இலக்கங்களுடனான கடினமான எழுத்துகளுடன் இருத்தல் வேண்டும். ஊகித்துக்கொள்ளக்கூடிய பிறந்த நாள் தினங்கள் அல்லது 1234 போன்ற இலக்கங்களை கடவுச்சொல்லாக வைத்துக்கொள்வது ஆபத்தானது.
இணையத்தளக் கொள்வனவில் கவனம்
கடனட்டைகளின் மூலம் கிடைத்துள்ள சிறந்த நன்மையானது, இது, உலகளாவிய ரீதியிலான சந்தையை, உங்களுக்காக திறந்துள்ளது. எந்தவொரு இடத்தில் இருந்தும், எந்தவொரு பொருளையும் உங்களால் கொள்வனவு செய்ய முடியும். அதனால், நீங்கள் பயன்படுத்தும் இணையளத்தளம், நம்பகத்தன்மையானதா என்பது குறித்தும் URLஇல், ‘http’ஆல் வழங்கப்பட்ட இணைப்பு உள்ளதாக என்பது பற்றியும் உறுதியாக இருக்கவேண்டும். இது, உங்களது தரவுகளை வேறுயாரும் பயன்படுத்தால் இருப்பதை உறுதி செய்கின்றது.
உங்களது கணக்கை எப்போதும் பரிசோதிக்கவும். எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தவும்
உங்களது கணக்கில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து, நீங்கள் அடிக்கடி கண்காணிப்பது மிக முக்கியமாகும். உங்களது கணக்கில், சந்தேகத்துக்கிடமான வகையில், பரிமாற்றல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படும் என்றால், உங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக, உடனடியாக செயற்படுவது மிக முக்கியமாகும். உங்களுடைய வங்கி, பணப்பரிமாற்றல்களுக்கான குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வசதிகளை வழங்குகின்றது என்றால், அதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதன்மூலம், உங்களது கணக்கில் சந்தேகத்துக்கிடமான எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும்.
அட்டைகளை இழத்தல்/ சந்தேகத்துக்கிடமான பரிமாற்றல்கள் குறித்து உடனடியாக அறிவிக்கவும்
உங்களது கடனட்டையை நீங்கள் தொலைத்துவிட்டாலோ அல்லது சந்தேகத்துக்கிடமான பரிமாற்றல் இடம்பெறுவதாக நீங்கள் அறிந்தாலோ, உடனடியாக வங்கிக்கு அறிவிக்கவும். இதன்மூலம், உங்களது அட்டையைத் திருடியவர்களால் இனிமேல் எந்தவொரு பரிமாற்றல்களையும் மேற்கொள்ளாமல் அதை வங்கி நிறுத்தி வைக்கும். வங்கியால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பின்னர், உங்களால் புதியதொரு அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்று, அட்டைகளைத் தொலைத்துவிட்டால் அல்லது சந்தேகத்துக்கிடமான பரிமாற்றல்கள் இடம்பெற்றால், 24/7 சேவையை வழங்கும் DFCCஇன் 011-2350000 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்கவும்.
உங்களது அட்டையை பாதுகாப்பாக வைத்திருப்பது இலகுவானது. சிறியதொரு கவனத்துடன் இருப்பதன் மூலம், பாரிய பிரச்சினைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். பாதுகாப்பாக இருந்து வாழ்க்கையை கொண்டாடுங்கள்! DFCC கடனட்டைகளை இங்கே ஒப்பிடவும்.