தொழில் முனைவர்களின் வளர்ச்சி
DFCCவங்கி பல SMEகளுக்கு அவர்களின் ஆரம்ப மற்றும் ஆபத்தான தொடக்க நிலைகளில் உதவி , அடுத்த கட்டத்தை அடைய அவர்களுக்கு உதவியதன் மூலம் புகழ்பெற்றது. பெரும்பாலானவை இன்று பெரிய நிறுவனங்களாக உருவாகியுள்ளன. SMEகளுக்கு நாணய வழிமுறைகள் மூலமாக மட்டுமல்லாமல்,ஒரு வணிகத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அவர்களுக்குக் கற்பிக்கும் தொழில்முனைவோரை கட்டியெழுப்பும் பயிற்சி திட்டங்கள் மூலமாகவும் வங்கி உதவுகிறது. இது 2018 ஆம் ஆண்டில் “சஹாயா ஹமுவா”தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்ந்தது. இலங்கை மத்திய வங்கியின் ஆதரவுடன் நாடு முழுவதும் இதுபோன்ற இருபது நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடாத்தப்பட்டன.
60 வருடங்களுக்கு மேலாக DFCC வங்கி தொழில் முனைவர்களுக்கும் சிறு அளவிலான வணிகர்களுக்கும் நிதி உதவி மட்டுமன்றி அவர்களுக்கு தேவையான திறன்களையும் நிபுணத்துவத்தையும் வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இவர்களில் அநேகமானோர் இன்று பெரிய கூட்டுத்தாபனங்களை அமைத்துள்ளார்கள்.
தனது வழக்கமுறையை தொடர்ந்து வங்கி 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள நுண்,சிறு,நடுத்தர அளவிலான வணிகர்களினதும் தொழில் முனைவர்களினதும் மேம்பாட்டிற்காக “சஹாய ஹமுவ”எனப்படும் தொழில் முனைவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பித்தது. நுண்,சிறு,நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவில் வணிக உரிமையாளர்களின் செயலமர்வுகள் நிதியறிவு, நிதி முகாமைத்துவ ஆற்றல்கள்,திறன்கள் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளன.
அடிமட்டத்தில் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பெறுமதிவாய்ந்த பயிற்சியையும் நுண்ணறிவுத் திறனை மட்டுமன்றி DFCC வங்கி சிறு வணிகங்களுக்கு வழங்கும் குறிப் பிட்ட நோக்கத்திற்கான திட்டங்களின் பொது மதிப்பீட்டையும் வழங்குகிறது.
——————
விவசாயத்திலிருந்து சேவைகள்,கைத்தொழில் வணிகங்கள்,வர்த்தகம்,சில்லறை வணிகம்,உணவு,மென்பானங்கள் இன்னும் பல சிறு வணிகங்களின் வளர்ச்சியை மேம்படுத்த “சஹாய ஹமுவ”செயலமர்வுகள் உதவியுள்ளன. இந்த துணிவாண்மை கிராமிய பொருளாதாரங்களுக்கு உதவுவதிலும் பிராந்திய அபிவிருத்தியை விருத்தி செய்வதிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்ய இருக்கின்றன. நுண்,சிறு,நடுத்தர தொழில்முயற்சிகளை தனது முழுநிலையான கொள்கை நோக்கில் செயல்விளைவிற்கு பயன்படும் ஒரு முக்கியமான துறையாக அரசாங்கம் இனம்கண்டுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கி தேசிய நிகழ்ச்சிநிரலை ஆதரித்து இத்துறையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அமுல் செய்துள்ளது